DSpace Collection:http://ir.lib.seu.ac.lk/handle/123456789/37382024-03-28T21:27:17Z2024-03-28T21:27:17Zஇலங்கையில் பணியகம் அரசியல்மயமாதல்: சில விமர்சனக் குறிப்புக்கள்ஸஜீதா, பாத்திமா ரீ.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/42802021-10-18T19:31:44Z2018-06-01T00:00:00ZTitle: இலங்கையில் பணியகம் அரசியல்மயமாதல்: சில விமர்சனக் குறிப்புக்கள்
Authors: ஸஜீதா, பாத்திமா ரீ.
Abstract: கோட்பாட்டடிப்படையில் பணியகவமைப்பு என்பது அரசியலில்
நடுநிலைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதன் பணிகளில் சுதந்திரமான தன்மை காணப்பட வேண்டும் என்றும் மக்களுக்கு சமத்துவமான அடிப்படையில் பணியாற்ற வேண்டும் எனவும் அறியப்ப்படுகின்றது.
எனினும் நடைமுறையில் பணியகவமைப்பு அதன் செயற்பாடுகளின்போது அரசியல்
செல்வாக்கிற்குட்படுவது உலகளவில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில்
காணப்படும் அம்சமாக உள்ளது. அந்தவகையில் காலனித்துவ காலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைப் பணியகவமைப்பானது அதன் செயற்பாடுகளின்
போது அரசியல் செல்வாக்கிற்குட்பட்டிருப்பதுடன் அரசியல்மயமாகிபயுள்ளமையே ஆய்வுப் பிரச்சினையாகும். அதன்படி இலங்கையின் பணியகவமைப்பு
அரசியல்மயமாகியுள்ளமையை வரலாற்று ரீதியாக ஆராய்வதையம் அதற்கான
காரணங்களைக் கண்டறிவதையும் இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாய்வு பண்பு ரீதியான விபரணப் பகுப்பாய்வாகக் காணப்படுவதுடன்
இரண்டாம் நிலைத்தரவு மூலங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததிலிருந்து இலங்கையில்
பணியகவமைப்பு அரசியல்மயமாக்கம் என்பது காலனித்துவ காலத்திலிருந்து
இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளமையும் அதற்கு பல்வேறு சமூக, பொருளாதார,
அரசியல் காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.2018-06-01T00:00:00Zபால்நிலை வகிபாகங்கள் சமூகமயமாக்கப்படல்அய்யூப், எஸ். எம்.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/42792021-10-18T19:31:44Z2018-06-01T00:00:00ZTitle: பால்நிலை வகிபாகங்கள் சமூகமயமாக்கப்படல்
Authors: அய்யூப், எஸ். எம்.
Abstract: ஒரு சமூகத்தின் தொடர்ந்தேர்ச்சியான இருப்பிற்கு அதன் அங்கத்தவர்களின்
அயராத உழைப்பும் தொடரான வகிபாகங்களும் (Roles) மிக முக்கியமானவை,
ஒரு ஆணும் பெண்ணும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளும் வகிபாகங்கள் அவர்களது உடல்சார்ந்து தீர்மானிக்கப்படுகின்றதான அல்லது பண்பாட்டினால்
வரையறுக்கப்படுகின்றதா என்பதில் புத்தி ஜீவித்துவ புலத்தில் மிகவும்
கூர்மையான விவாதங்கள் நிலவுகின்றன. இவ்வாய்வானது ஒரு தனியனின்
வகிபாகங்கள் சமூகத்தால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு சமூகமயமாக்கல்
செயற்பரட்டின் மூலம் கடத்தப்படுகின்றன என்பதனை விளக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு இரண்டாம் நிலைத் தரவுகளை புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், இணைய வழித் தரவுகள், அறிக்கைகள் போண்றவற்றிலிருந்து பிரதானமாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளது. குடும்பம், கல்வி நிறுவனங்கள், வெகுஜன ஊடகங்கள், அரசியல், சமயம் போன்ற ஏனைய சமூக நிறுவனங்கள் போன்றவை ஆண்-பெண் வகிபாகங்களை ஒரு தனியனில் கட்டமைக்கும் விதம் இவ்வாய்வில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.2018-06-01T00:00:00Z"மனித சுதந்திரம்” பற்றிய சாத்ரே மற்றும் ஃபூக்கோவின் கருத்துக்கள்: ஒரு பகுப்பாய்வுஇஸ்ஸதீன், எம். எல்.பாத்திமா நப்லா, கே. எல்.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/42292021-10-18T19:31:10Z2018-06-01T00:00:00ZTitle: "மனித சுதந்திரம்” பற்றிய சாத்ரே மற்றும் ஃபூக்கோவின் கருத்துக்கள்: ஒரு பகுப்பாய்வு
Authors: இஸ்ஸதீன், எம். எல்.; பாத்திமா நப்லா, கே. எல்.
Abstract: ஐரோப்பியத் தத்துவ மரபில் அதிகம் பேசப்பட்ட எண்ணக்கருவாக சுதந்திரம்
காணப்படுகிறது. இருபதாம் நாற்றாணழன் இருபப்பியல் சிந்தனையாளரான ஜீன் பவுல் சாத்ரே மனித சுதந்திரம் பற்றி அதிகம் பேசியவராவார். அவர் சுதந்திரம்
என்பதை மனிதப் பிரக்ஞையின் அடிப்படைப் பண்பாக கருதுகிறார். மனிதன்
வரையறையற்றவன், அவன் சுதந்திரமானவன் என்பதன் மூலம் அவன் எதுவாக
இருக்க வேண்டும் என்பதை அவனேதான் நிர்ணயித்துக் கொள்கிறான் என்கிறார்.
இதற்கு மாற்றமான ரீதியில் பின்நவீனத்துவச் சிந்தனையாளர் பூக்கோவின்
கருத்துக்கள் அமைந்திருந்தன. பூக்கோவின்படி மனிதர்கள் சுதந்திரமானவர்கள்
அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள்,
அதிகாரம் எப்போதும் அவர்களை ஒமுங்கு படுத்திக் கொண்டேயிருக்கிறது
என்றார். இது ”மனிதன் தன் சுதநதர்திதை மறுத்து தான் ஏதோவொரு வகையில்
கடடுப்படுத்தப்படுவதாக நினைத்துக் கொண்ழருக்கிறான் என்ற சாத்ரேயின்
விளக்கத்தைப் பூச்சியமாக்கி இருக்கிறது. அதாவது தீர்மானிக்கப்பட்ட
எல்லைக்குள்ளேயே மனித செயற்பாடுகள் அமைகின்றன அல்லது அதிதாரம்
தனக்கான உரையாடலை நிகழ்த்துவதன் மூலம் மனிதனது தெரிவுகளையும்
அதுவே தீர்மானிக்கிறது என்கிறார் பூக்கோ. இவ்வகையில் இவ்வாய்வானது
ஒன்றிற்கொன்று முரணான இவ்விரு சிந்தனைகளின் ஒளியில் மனித சுதந்திரத்தின்
சாத்தியப்பாடு குறித்து ஆராய்கிறது.2018-06-01T00:00:00Zகீழைத்தேயச் சிந்தனை மரபில் ஆசாரக்கோவை: ஓர் ஒழுக்கவியல் நோக்குகணேசராஜா, க.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/42252021-10-18T19:32:44Z2018-06-01T00:00:00ZTitle: கீழைத்தேயச் சிந்தனை மரபில் ஆசாரக்கோவை: ஓர் ஒழுக்கவியல் நோக்கு
Authors: கணேசராஜா, க.
Abstract: ஆரம்ப காலத்திலிருந்தே அறிவைப் பெறுவதும் அவ்வறிவைப் பிரயோகிப்பதும் முக்கியமாகக் கருதப்பட்டது. இப்பணியில் மேலைத்தேயச் சிந்தனையாளர்களும் கீழைத்தேயச் சிந்தனையாளர்களும் அதிக ஈடுபாடு காட்டினார்கசர். குறிப்பாக கீழைத்தேயச் சிந்தை மரபில் சங்கமருவியகால சிந்தனையாளனர்களர் வாழ்க்கையையே தத்துவமாக (Living Philosophy) கருதியதன் காரணமாக மனித வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒழுக்க ரீதியான வாழ்க்கை அவசியம் என்பதை வலியுறுத்தும் பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை கூறுகின்ற ஒழுக்கக் கருத்துக்கள் மிகவும் பெறுமதியானவைகளாகும். தனிமனிதன் முதல் சமூகம் வரை அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் அம்சங்களை நடைமுறை ரீதியாக. வலியுறுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது என்பதை எடுத்துக் கூற இவ்வாய்வு முற்படுகிறது.2018-06-01T00:00:00Z