DSpace Collection: 20212021http://ir.lib.seu.ac.lk/handle/123456789/56312024-03-20T21:18:04Z2024-03-20T21:18:04Zශ්රී ලංකා අග්නිදිග විශ්ව විශ්ව විද්යාලයේ ඉගෙනුම ලබන මුස්ලිම් ශිස්යාවන් සිය අධ්යයනය කටයුතු වලදී සිංහල බාෂාව භාවිතා කිරීමේ ප්රව ණතාවය පිළිබඳ අධ්යනයක්Nilfa, M. J. F.Farha, M. A. F.Nifla, N. M. F.Mazahir, S. M. M.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/57442021-10-18T19:48:15Z2020-04-04T00:00:00ZTitle: ශ්රී ලංකා අග්නිදිග විශ්ව විශ්ව විද්යාලයේ ඉගෙනුම ලබන මුස්ලිම් ශිස්යාවන් සිය අධ්යයනය කටයුතු වලදී සිංහල බාෂාව භාවිතා කිරීමේ ප්රව ණතාවය පිළිබඳ අධ්යනයක්
Authors: Nilfa, M. J. F.; Farha, M. A. F.; Nifla, N. M. F.; Mazahir, S. M. M.2020-04-04T00:00:00Zஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலும் அதன் விளைவுகளும் குறித்த ஓர் பகுப்பாய்வுBenazir, AW.Fathimahttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/57432021-10-18T19:30:06Z2021-08-04T00:00:00ZTitle: ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலும் அதன் விளைவுகளும் குறித்த ஓர் பகுப்பாய்வு
Authors: Benazir, AW.Fathima
Abstract: உலக அரசுகளில் இன்று பிரதானமான ஓர் பேசுபொருளாக வன்்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றன காணப்பட்டன. தெற்காசிய நாடுகளுல் இலங்கையானது பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட ஓர் தீவாகும். இலங்கை
பெரும்பான்மை சிங்கள மக்களையும் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களையும் கொண்டமைந்த ஓர் நாடாகும். இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதல்
என்பது நீண்ட கால வரலாற்றை கொண்டமைந்துள்ளது. 2009 ஆண்டு இலங்கை அரசானது ஒர் பாரிய மோதலை எதிர் கொண்டதுடன் சர்வதேச சமூகங்களுக்கு மத்தியில் விமர்சனங்களுக்கும் ஆளானது. இதனை அடுத்து நீண்ட காலத்தின் பின்னரான ஓர் பயங்கரவாதத ; தாக்குதலாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணப்படுகின்றது. இத்தாக்குதலானது 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் கிழக்கில் முக்கிய நகரமாக விளங்கும் மட்டக்களப்பிலும் மிகவும் ஒருங்கிணைந்த அடிப்படையிலும் திட்டமிடப்பட்ட அடிப்படையிலும் தற்கொலைத்
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான காரணம் தொடர்பில் பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை முஸ்லிம்களின் அரபுமயமாக்கலை
இத்தாக்குதலுக்கான காரணமாக அடையாளப்படுத்தியுள்ளனர். தாக்குதல்களுடன் முஸ்லிம்களில் சிறுபகுதியினர் தொடர்புபட்டிருப்பதன் காரணமாக தாக்குதல்களைத்தொடர்ந்து இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.ஆகவே தான் இத்தாக்குதலின் பின்னனி என்ன என்பதனையும் இத்தாக்குதலின் விளைவு யாது என்பதையும் கண்டறிவதை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு இடம் பெற்றுள்ளதுடன் ஆய்வுத் தகவல்கள் 2ஆம் நிலைத்தரவு களிலிருந்து பெறப்பட்டுள்ளதுடன் இவ்வாய்வின் கண்டு பிடிப்புகளாக ஈஸ்டர் தாக்குதலையும் அவற்றின் விளைவு களையும் இதனால் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்க வேண்டிய சவால்களையும் வெளிப்படுத்தி யுள்ளது.2021-08-04T00:00:00Zஇலங்கை சமூகத்தில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களும் அதற்கான காரணங்களும் : மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் ஆய்வுThanurshan, S.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/57422021-10-18T19:30:46Z2021-08-04T00:00:00ZTitle: இலங்கை சமூகத்தில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களும் அதற்கான காரணங்களும் : மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் ஆய்வு
Authors: Thanurshan, S.
Abstract: உலகில் மனித உயிர் என்பது இழந்தால் திரும்பப் பெற முடியாத ஒரு விடயமாகும். அண்மைக் காலமாக இத்தகைய உயிர்களின் நிலைத்திருப்பு தன்;மையென் பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் இலங்கையைப்
பொறுத்தவரை அண்மைக் காலமாக வீதி விபத்தில் அதிகமான உயிர்களை உள்வாங்கிக்கொள்ளும் ஒரு நாடாக மாற்றம் கண்டுள்ளது. அதனடிப்படையில் மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை சமூக, பொருளாதார ரீதியாக விருத்தியடைந்த ஒரு மாகாணமாக காணப்பட்டாலும் தொடர்ச்சியாக அதிகரித்த வீதி விபத்து இடம்பெறும் ஒரு இடமாகவும் காணப்படுகிறது. அண்மைக் காலமாக எடுத்துக்கொண்டால் நாட்டில் வீதி விபத்து
என்பது சர்வ சாதாரணமாக இடம்பெறும் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது. குறிப்பாக 13ம் கட்டை பஸ் விபத்து, பதுளையில் முதல் நாள் பாடசாலை சென்ற சிறுவனின் விபத்து என்பன
சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசைப் பொறுத்தவரை வீதி விபத்தை தடுக்க முறையான பாதைகளை அமைத்தாலும், கடுமையான சட்டத்தை விதித்தாலும், வீதியில் உயர் தர தொழினுட்பத்தை பயன்படுத்தினாலும் வீதி விபத்தின்
எண்ணிக்கை அதிகரிக்;கிறதே தவிர மாறாக குறைவில்லை. அந்தவகையில் உயிர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டும், வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்தும் பொருட்டும், தொடர்ச்சியாக வீதி விபத்து ஏற்படுவதன் காரணத்தை கண்டறியும் பொருட்டும், அதனை தடுக்க முறையான தீர்வையும் வழங்கும் பொருட்டும், “இலங்கை
சமூகத்தில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துகளும் அதற்கான காரணங்களும்" என்ற தலைப்பில் மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் ஆய்வாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்திய இவ்வாய்வானது விவரண, விளக்க முறையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுளளது. இவ்வாய்வின் மூலம்
கண்டறியப்பட்ட பிரதான விடயங்களாக கடுமையான சட்டங்கள் இன்மை, வீதி ஒழுங்கை பேணாமை, அதிகரித்த மதுபாவனை, பயணிகள் பற்றிய கரிசனை இன்மை மற்றும் அனுபவம்
இன்மை என்பன காரணமாக அமைகிறது. இதற்கு கடுமையான சட்டத்தை விதித்தல்,சாரதிகளுக்கு பயணிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்தல் மற்றும் வீதியில் சவாரி ((Riding) செய்பவரின் சாரதி அனுமதியை தடை செய்தல் என்ற பரிந்துரைகளும் இறுதியில் முன ;வைக்கப்பட்டுள்ளது.2021-08-04T00:00:00Zதென்னாசியப் பிராந்தியத்தின் ஜனநாயகம், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த பகுப்பாய்வுBenazir, AW.Fathima.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/57412021-10-18T19:49:12Z2021-08-04T00:00:00ZTitle: தென்னாசியப் பிராந்தியத்தின் ஜனநாயகம், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த பகுப்பாய்வு
Authors: Benazir, AW.Fathima.
Abstract: ஜனநாயகம், வன்முறை, மனித உரிமை என்ற சொற்பதங்கள்
தென்னாசிய பிராந்தியத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றதாகும். அபிவிருத்தியினை எட்டிய பல நாடுகளில் அது நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே சாத்தியமானது.
தென்னாசிய அரசுகள் போன்ற பல்லின சமூகம் ஒன்றில் ஜனநாயகத்தினை கட்டியெழுப்புதல் என்பது சிக்கல் தன்மை வாய்ந்;ததாகும். அவ்வாறே வன்முறைக்கு பேர்போன ஒரு
பிராந்தியமாகவும் தெற்காசிய பிராந்தியம் செல்வாக்குச் செலுத்துகின்றது. மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இப் பிராந்தியம் தவறியுள்ளது எனலாம். பொதுமைப்பாட் டுக்கு
முரணாக வேறுபாடுகள் வெளிப்படும்போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பன மீறப்படுகின ;றது. இவற்றின் ஒரு வெளிப்பாடாக வன்முறையும் எழுந்து விடுகின்றது. அதிலும்
குறிப்பாக காலனித்துவ செயற்பாடுகள் உள்ளடங்கலான பல்வேறு காரணிகளின் தாக்கத்தினால் தென்னாசியாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை கட்டியெழுப்புவது
நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்திய யுகத்தில் தேசத்தினை கட்டியெழுப்புதல் தளர்வுற்று இருப்பதனால் புதிய தேசிய அடையாளத்தினூடாக உருவாக்கப்படும் ஐக்கியம் இந் நாடுகளின் நீண்டகால எதிர்பார்க்கையாக மட்டுமே உள்ளது.
வெற்றிகரமான தேச நிறுமானத்திற்கு உதவும் ஜனநாயக நிறுவனங்கள் பல இந்நாடுகளில் சிதைவுற்று உள்ளன. இந்த வகையில் மனித உரிமையினை பேணுதல் மற்றும்
ஜனநாயகத்தினை கட்டியெழுப்புதல் என்பன தென்னாசிய அரசுகளுக்குரிய முக்கிய பிர்ச்சினையாக மாறியுள்ளதனை அவதானிக்கலாம். ஆகவேதான் இந் நெருக்கடிகள் குறித்த
பண்புசார் முறையிலமைந்த ஒன்றாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.2021-08-04T00:00:00Z