DSpace Collection: December 2021December 2021http://ir.lib.seu.ac.lk/handle/123456789/59212024-03-20T05:10:12Z2024-03-20T05:10:12ZKalamMohamed Rinos, M. H. (Editor)Wickramaratne, A. (Editor)http://ir.lib.seu.ac.lk/handle/123456789/59362022-03-22T05:27:31Z2021-12-01T00:00:00ZTitle: Kalam
Authors: Mohamed Rinos, M. H. (Editor); Wickramaratne, A. (Editor)2021-12-01T00:00:00Zமேற்கத்திய கலாசாரம் முஸ்லிம் பெண்களின் நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது: இலங்கை, கண்டி மாவட்டத்தின் கல்ஹின்னைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஒரு சமூக ஆய்வுFathima Rishadha, M. A.Razick, Ahamed SarjoonSaujan, Iqbalhttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/59352022-03-22T05:27:31Z2021-12-01T00:00:00ZTitle: மேற்கத்திய கலாசாரம் முஸ்லிம் பெண்களின் நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது: இலங்கை, கண்டி மாவட்டத்தின் கல்ஹின்னைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஒரு சமூக ஆய்வு
Authors: Fathima Rishadha, M. A.; Razick, Ahamed Sarjoon; Saujan, Iqbal
Abstract: உலகமயமாக்கல் தனிமனித வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலக
நாடுகள் தங்கள் கலாசார மேலாதிக்கத்தை கிழக்குலக நாடுகள் மீது திணிப்பதற்கு
முனைகிறது அதில் சமூக ஊடகங்களின் பங்கு அளப்பெறியது. குறிப்பாக மேற்குலக
கலாசார தாக்கம் முஸ்லிம் பெண்களுக்கு மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்கங்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களுக்கு அப்பால் இஸ்லாம் தடுத்துள்ள பாவமான
காரியங்களின்பால் இணைப்பதாக அமைந்துள்ளது. இவ்வாய்வு மேற்கத்தேய கலாசாரம்
கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பெண்களில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது
என்பதை கண்டறிவதை நோக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அளவு மற்றும் பன்புசார்
முறையிலமைந்த இவ்வாய்வில் மூடியவினாக்கொத்து மற்றும் முறைசாரா அவதானம்
போன்ற தரவுத் திரட்டு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன்
ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள், இணைய ஆக்கங்கள் மற்றும் இதர வெளியீடுகள் போன்ற
மூலங்களும் வாசிப்புக்குட்படுத்தப்பட்டன. இவ்வாய்வில் ஆய்வுப்பிரதேச முஸ்லிம்
பெண்களில் 140 பங்குபற்றுனர்கள் எளிய எழுமாற்று அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு
இவர்களிடம் அளவியல் வினாக்கொத்து மூலம் தரவுகள் பெறப்பட்டன. அளவுசார் தரவுகள்
SPSS மென்பொருளின் உதவியுடன் விபரனப் பகுப்பாய்வுக்குட்படுத்து. இவற்றுடன்
அவதானம் மூலம் பெறப்பட்ட தரவுகள் குறியீட்டு முறை மூலம்
பகுப்பாய்வுக்குட்படுத்தப்படன. ஆய்வின் பிரதான கண்டறிதல்களாக பிரதேச பெண்களின்
உணவு, உடை, விழுமியம் மற்றும் சமூகத்தொடர்பு போன்றன பகுதியளவில் மேற்கத்தேய
கலாசாரத் தாக்கத்திற்கு உற்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வயது
பிரிவினர்களாக 15- 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் காணப்படுகின்றனர். மேலும் இந்நிலை
கல்விகற்ற பெண்களிடமே அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலை
தொடருமிடத்து சொந்த கலாசார நடைமுறைகளை மறந்து மேற்கத்தேய கலாசார ஒருங்கில்
முஸ்லிம் பெண்கள் தங்கிவாழும் நிலை உருவாதுடன். இதன் மூலம் இஸ்லாமிய கலாசார
விழுமியங்களை புறக்கனிக்கும் ஒரு சமூகத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை
எதிர்வுகூறலாக குறிப்பிட முடியும்.2021-12-01T00:00:00Zமேற்கினதும் இஸ்லாத்தினதும் நோக்கில் மனித ஒழுக்கம்: ஓர் ஒப்பீட்டாய்வுZunoomy, M. S.Munas, M. H. A.http://ir.lib.seu.ac.lk/handle/123456789/59342022-03-22T05:27:34Z2021-12-01T00:00:00ZTitle: மேற்கினதும் இஸ்லாத்தினதும் நோக்கில் மனித ஒழுக்கம்: ஓர் ஒப்பீட்டாய்வு
Authors: Zunoomy, M. S.; Munas, M. H. A.
Abstract: மனித வாழ்விற்கு ஒழுக்கம் அவசியமானதொன்றாக காணப்படுகின்றது. இதிலுள்ள ஒழுக்கக்
கோட்பாடுகள் மனித வாழ்வின் போக்கை தீர்மானிக்க வழியமைக்கின்றது. குறிப்பாக,
ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் நம்பிக்கைக் கோட்பாடு, இலட்சிய நோக்கு, வாழ்வியல்
என்பவற்றிற்கேற்ப இது வித்தியாசமாக அமையும். இந்தவகையில், மனிதன் மற்றும் ஒழுக்கம்
பற்றிய வரையறையில் மேற்கினதும் இஸ்லாத்தினதும் கருத்துக்களைக் கண்டறியும்
நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஒப்பீட்டாய்வு
முறையியலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தி
இவ்வாய்வு அமைவதால், தரவுகளைப் பெற ஒழுக்கவியல் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள்,
ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், இணையக் கட்டுரைகள் ஆகியன
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் கண்டறிதல்களாக மேற்கினது ஒழுக்கவியல்
கோட்பாடுகள் மனிதனால் மனித பகுத்தறிவாலும் சிந்தனையாலும் தோற்றுவிக்கப்பட்டதால்
எந்தவொரு ஒழுக்கவியல் கோட்பாடும் வாழ்வியல் ரீதியான கோட்பாடாக செயற்பட்டு முழு
மனித சமூகத்திற்கும் பொருத்தமானதொரு கோட்பாடாக உருவாகவில்லை. இதிலிருந்து
இஸ்லாமிய கோட்பாடுகள் விதிவிலக்குப் பெறுகின்றது. ஏனெனில், இஸ்லாமிய ஒழுக்கங்கள்
மனிதனை சிருஷ்டித்த படைப்பாளனிடமிருந்து வழங்கப்பட்டவைகளாக உள்ளன என்பதே
இன்றுவரை இஸ்லாமிய ஒழுக்கவியல் நிலைத்திருக்க காரணமாக அமைகின்றது. ஏனெனில்,
மனிதனது நடத்தைகளும், இயக்கங்களும், தொழிற்பாடுகளும் சிக்கலானவையாக
இருப்பதால் அவற்றை முறையான கட்டுப்பாட்டுக்குள் அமைத்து நெறிப்படுத்த மார்க்கம்,
ஒழுக்கம், சட்டம் ஆகிய மூன்று இணைந்து தொழிற்பட வேண்டும். இம்மூன்றில் ஒன்றையோ
அல்லது இரண்டையோ செயற்படுத்தினால் கூட அவ்வொழுக்கவியல் வெற்றி பெற
முடியாது என்பது நிதர்சனமாகும்.2021-12-01T00:00:00Zஆசிரியர்களின் தொழில் திருப்தியும் ஆசிரியரிய வளமுகாமைத்துவமும்: ஓர் இலக்கியமீளாய்வுPararajasingam, RajeswaranJeyalaxsumy, RasanayagamNavaneethakrishnan, Kengatharanhttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/59332022-03-22T05:27:31Z2021-12-01T00:00:00ZTitle: ஆசிரியர்களின் தொழில் திருப்தியும் ஆசிரியரிய வளமுகாமைத்துவமும்: ஓர் இலக்கியமீளாய்வு
Authors: Pararajasingam, Rajeswaran; Jeyalaxsumy, Rasanayagam; Navaneethakrishnan, Kengatharan
Abstract: மனிதவள முகாமைத்துவ அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியவள
முகாமைத்துவ நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியவள முகாமைத்துவ
பிரயோக நிலைமைகளை கல்வி ஊடாக பாடசாலை மட்டத்தில் வலுப்படுத்துவதற்கும்
கல்வியின் தேசியக் குறிக்கோள்களையும் பாடசாலையின் தொலைநோக்குகளையும்
அடைவதற்கும் தேசியமட்ட கொள்கைகள், ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்புக்கள்,
விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் ஊடாக தேசியஇ மாகாண
மற்றும் வலயரீதியில் முகாமைத்துவ நடைமுறைகள் உருவாக்கப்பட்டு ஆசிரியவள
முகாமைத்துவம் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் ஆய்வாளரினால்
“ஆசிரியர்களின் தொழில் திருப்தியும் ஆசிரியவளமுகாமைத்துவமும் - ஓர்
இலக்கியமீளாய்வு” ஆய்வுத்தலைப்பு தொடர்புடைய அனுபவம்சார் இலக்கிய உசாவுகையை
அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியவள முகாமைத்துவத்தை
நடைமுறைப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் எவை? ஆசிரியவள
முகாமைத்துவத்திற்கும் ஆசிரியர்களின் தொழில் திருப்திப் பண்புக்கூறுகளுக்கு இடையிலான
தொடர்பு எவ்வாறு உள்ளது? ஆகிய ஆய்வு வினாக்களை அடிப்படையாகக் கொண்டு
ஆசிரியவளமுகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும்
காரணிகளை இனங்காணல். ஆசிரியவளமுகாமையின் பண்புக்கூறுகளான நியமனம்,
ஆட்சேர்ப்பு
.இ பதவிஉயர்வுஇ இடமாற ;றம்இ தரங்கணிப்புஇ வாண்மைத்துவவிருத்திஇ
ஊக்கப்படுத்தல்இ ஆளணிப்பகிர்வுஇ மேற்பார்வை போன்ற காரணிகள் எவ்வாறான
தாக்கத்தைக் கொண்டுள ;ளன என்பதை கண்டறிதல் ஆய்வின் நோக்கங்களாக அமைகின்றன.
தொடர்புடைய அனுபவம்சார் இலக்கிய உசாவுகை ஆய்வுக்கட்டுரைகள்இ ஆய்வுஅறிக்கைகள்இ
ஆய்வுச்சஞ்சிகைகள் மற்றும் ஆய்வுச்சுருக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு தரவுகள்
பெறப்பட்டு பண்புசார் ஆய்வு அணுகுமுறையில் உள்ளடக்கப்பகுப்பாய்வு உட்படுத்தப்பட்டது.
ஆசிரியர்களின் தொழில் திருப்திப் பண்புக்கூறுகளான நியமனம்இ ஆட்சேர்ப்பு. பதவிஉயர்வு,
இடமாற்றம், தரங்கணிப்பு, வாண்மைத்துவவிருத்தி, ஊக்கப்படுத்தல். ஆளணிப்பகிர்வு.
மேற்பார்வை போன்ற காரணிகள் நேரான மற்றும் எதிரான தாக்கத்தை கொண்டுள்ளன.
அதேவேளை உள்ளக வெளியக காரணிகளான அரசியல் சமூகக் கராணிகள் மற்றும்
தனிப்பட்ட காரணிகள் ஆசிரியர்களின் தொழில் திருப்தியில் குறிப்பாக செல்வாக்குச்
செலுத்துகின்றன.2021-12-01T00:00:00Z