DSpace Collection: This is the proceedings of 6th International Symposium held on 20 -21 December, 2016 at the South Eastern University of Sri Lanka
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1939
This is the proceedings of 6th International Symposium held on 20 -21 December, 2016 at the South Eastern University of Sri Lanka2024-03-29T12:50:35Zவிவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள்: ஒரு மெய்யியல் ஆய்வு
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2492
Title: விவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள்: ஒரு மெய்யியல் ஆய்வு
Authors: Nirosan, Sivakumar
Abstract: சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் ஒரு தனிமனித ஆளுமை எவ்வாறு
கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த வரையறைகளை பாரத தேசத்திற்கு மட்டுமன்றி முழு
உலகத்திற்குமாக பறைசாற்றி நிற்கின்றன. ஆளுமை குறித்து விளக்கமுற்பட்ட மேலைத்தேய
சிந்தனையாளர்கள் ஆளுமை குறித்து பல்வேறுபட்ட கருத்தாக்கங்களை வெளிப்படுத்தி நின்றனர். சிக்மண்ட்
புறொய்ட் பாலியல் உந்தல்களையும், காள் யுங் தொன்மங்களையும், எரிக் எரிக்சன் சமூகத்தினையும்
ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிக்கின்ற ஊக்கிகளாகக் குறிப்பிடுகின்றனர்.சுவாமி விவேகானந்தர் இவை
யாவற்றிலும் இருந்து வேறுபட்டு இந்திய மரபிற்கே உரிய தனித்துவமான பாணியில் ஒருவரது
ஆளுமையினைத் தீர்மானிப்பது ஆன்மீக பலமே என்பதனை வலியுறுத்தினார்.ஒருவரது ஆளுமையைத்
தீர்மானிப்பதில் உடல் பலம், உயிர் பலம், மனபலம், அறிவு பலம், ஆன்மீக பலம் எனும் ஐந்து கூறுகள்
செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிடும் விவேகானந்தர் ஆன்மீக பலமே அனைத்தையும்
தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஒருவரது உள்ளத்திலே புதைந்து கிடக்கின்ற ஆன்மபலமே ஒருவனை
உயர்வடையச் செய்கின்றது. அத்தகைய ஆன்ம பலத்தை இந்திய மக்களுக்கு எடுத்தருளினார்.
ஒவ்வொருவரும் தமது தெய்வீக ஆற்றலையும், இயல்பையும் ஓங்கச் செய்ய வேண்டும் என
வலியுறுத்தினார். மேலும் ஒருவனது சிந்தனைகளும், செயல்களுமே அவனது நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்பதனை எடுத்துக் காட்டினார். எனவே சிந்தனைகளும், செயல்களும்
சரியானதாகவும், தெளிவானதாகவும், வலுவானதாகவும் அமைகின்ற போது ஒரு மனிதன் சிறந்த
ஆளுமைமிக்க மனிதனாக உருவாகின்றான் என்பதனை எடுத்துக் காட்டியதோடு, சிறந்த ஆளுமை மிக்க
தனிநபர்களின் உருவாக்கம், சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தினதும், நாட்டினதும் உருவாக்கத்திற்கு
வழிவகுக்கும் என்பதனையும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.இத்தகைய கால வரம்பிற்குட்படாத
தீர்க்கதரிசனத்தைக் கொண்ட விவேகானந்தரது ஆளுமை குறித்த சிந்தனைகள் சமகால உலகிலும் மிகவும்
தேவைப்பாடுடையனவாய் விளங்குகின்றன. இன்றைய உலகில் ஆளுமை என்பது குறித்து காணப்படுகின்ற
தவறான புரிந்து கொள்ளல்களில் இருந்து விடுபட்டு, உண்மையான சிறந்த ஆளுமை குறித்த
விழிப்புணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் வித்திடுகின்றன
என்பதனை இவ்வாய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது.இவ் ஆய்வுக்குரிய தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளில்
இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல்,
விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.2016-12-20T00:00:00Zஅரசியல் கட்சிகளில் மதக்காரணிகளின் செல்வாக்கு: இலங்கையை மையப்படுத்திய ஆய்வு (1978-2014)
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2491
Title: அரசியல் கட்சிகளில் மதக்காரணிகளின் செல்வாக்கு: இலங்கையை மையப்படுத்திய ஆய்வு (1978-2014)
Authors: பிரசாத், சி.; கணேசலிங்கம், கே.ரீ.
Abstract: இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றம் 1930களின் பிற்பகுதியிலேயே
ஆரம்பமாகின்றது. டொனமூர் அரசியற் திட்டத்தின் சர்வஜன வாக்குரிமையின் விளைவு காரணமாக
அரசியற் கட்சிகள் உருவாவதற்கான அடித்தளத்தினை இட்டன. முதலில் இடதுசாரிக் கட்சிகளே
தோற்றம் பெற்றன. பின்னர் காலனித்துவ அரசிடம் இருந்து சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளும்
நோக்கோடு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வலதுசாரிக் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சியில் ஏற்பட்ட
தலைமைத்துவ முரண்பாடு காரணமாக S.W.R.D.பண்டாரநாயக்கா இக்கட்சியில் இருந்து விலகி
சிங்கள மகாசபை மூலமும், பௌத்த மத தேசியவாதிகளின் ஆதரவோடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
தோற்றம் பெற்றது. 1956ல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்
காரணமாகவும் மற்றும் பௌத்த மதத்தின் ஆதரவின் மூலம் இனவாத அரசியல் எழுச்சியுற்றும் மொழி,
மதம் என்பன அரசியல் மயமாக்கப்பட்டதோடு பிற்பட்ட காலத்தில் பௌத்த மதத்தின் செல்வாக்கு
அரசாங்க நிறுவனங்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி
அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாத அரசியலுக்கு ஆதரவு வழங்கியிருந்ததோடு
இவ்விரு கட்சிகளினால் உருவாக்கப்பட்ட யாப்புக்களில் பௌத்த மதம் அரச மதமாக
அங்கீகரிப்பட்டிருந்தது. மேலும் பௌத்த பீடங்களின் செல்வாக்கு கட்சியின் அரசியலினை
தீர்மானிப்பதாக அமைந்ததோடு இலங்கையின் அரசியல் கட்சிகளில் மதம் பிரிக்க முடியாத ஓர்
அம்சமாக விளங்கியது எனலாம். இலங்கையானது பல்லின கலாசாரத்தைக் கொண்ட நாடு ஆகும்.
இங்கு பல இனத்தவர்கள் வாழ்;வதோடு அவர்கள் பல மொழி பேசுபவர்களாகவும், பலவகையான சமய
நம்பிக்கை மற்றும் பாரம்பரிய கலாசார மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்த போதிலும்
இலங்கை அரசியலில் மதவாதம் தலைதூக்கும் தன்மையானது இனங்களுக்கிடையான ஒற்றுமையினை
சீர்குலைப்பதாக அமைவதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மதமாக பௌத்தம் இருந்த போதிலும்
இந்து, இஸ்;லாம், கிறிஸ்தவ மதங்களின் சுதந்திரத்தில் பௌத்த தேசியவாதக் குழுக்களும் மற்றும்
அவை சார்ந்த கட்சிகளும் தலையிடுகின்ற தன்மையானது சமாதான செயன்முறைகளுக்கும், மத
சுதந்திரத்திற்கும் தடையாக அமைவதோடு மட்டுமன்றி மத வன்முறைகளுக்கான காரணியாகவும்
விளங்குகின்றது. இந்த பின்னணியில் இவ் ஆய்வானது அரசியல் கட்சிகளில் மதக் காரணிகளின்
செல்வாக்கினை இலங்கையை மையமாகக் கொண்ட ஆய்வு செய்வதாக அமைகின்றது. இவ்
ஆய்வானது முதன்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை மையமாகக் கொண்டும், கட்சிக்
கோட்பாடு மதச்சார்பின்மை கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டும் வரலாற்று அணுகுமுறை
ஒப்பீட்டு அணுகுமுறையின் மூலம் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது.2016-12-20T00:00:00Zபாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அமுலாக்கமும் அதன் நடைமுறைகளும்: ஓர் ஆய்வு
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2490
Title: பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அமுலாக்கமும் அதன் நடைமுறைகளும்: ஓர் ஆய்வு
Authors: நிதிஹரன், கந்தசாமி
Abstract: பாடசாலைகளில் ஆசிரிய வாண்மைசார் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் உரிய
பயன்தரவில்லை என்ற குறைபாட்டை களையும் முகமாகவும் தரமான ஆசிரியர் அபிவிருத்தியை
ஏற்படுத்துவதற்கும் என அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி
நிகழ்ச்சித் திட்டமாகும். (School Based Teachers’ Development – SBTD) இத்திட்டத்தின் மூலம்
ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்குத் தேவையான விடயங்களை பாடசாலை மட்டத்திலே அதிபர்
கண்டறிந்து பொருத்தமான செயற்றிட்டங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கு இதன் மூலம் வகை
செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் எதிர்பார்க்கும் நோக்கங்களாக, பாடசாலை மட்ட ஆசிரிய
அபிவிருத்தி செயற்றிட்டத்தில் உள்ள அம்சங்களை இனங்காணல், அதற்கான வளங்களை
இனங்காணல் மற்றும் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டதினை
நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகளின் செயற்பாடுகள் கண்டறிதல் என்பனவாகும். இவ்வாய்வின்
ஆய்வுப் பிரச்சினையாக பாடசாலைகளுக்கு நேரடியாக நிதி; கையளிப்புச் செய்யப்படுகின்ற போதும்
அதனைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகள் சரியான கொள்கையின் கீழ்
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன. மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள கோறளைப்பற்றுப் பிரதேசம் ஆய்வுக்குரிய பிரதேசமாகும். கோறளைப்பற்றுப்
பிரதேசத்தில் உள்ள 15 அரச பாடசாலைகளில் 1AB,1C,Type-II வகையைச் சேர்ந்த ஏழு
பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கிய மீளாய்வுக்கு பாடசாலை மட்ட ஆசிரிய
அபிவிருத்தி தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கல்வி அமைச்சின் பிரதான வெளியீடு
பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் கல்வி மற்றும் அபிவிருத்தி தொடர்பான கல்வி அமைச்சின் சுற்று
நிருபங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாய்வு ஒரு கள ஆய்வாக அமைந்துள்ளது. அளவுசார்
ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்விலே வினாக்கொத்து மூலம் பெறப்படும்
தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. ஆய்வு முடிவுகளின் படி கோறளைப்பற்றுப் பிரதேசப்
பாடசாலைகளில் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதில் 53மூஆசிரியர்களின் கருத்துபடி அதற்கான வளங்கள் போதுமானதாகக்
கிடைப்பதில்லை. அத்தோடு இதனை நடைமுறைப்படுத்துவற்கு உரிய செயற்பாடுகள் பாடசாலைகளில்
66மூஆசிரியர்களின் கருத்துப்படி பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை. ஆசிரியர்களின்
உண்மையான தேவைப்பாடுகள் இனங்காணப்படுதல், ஆசிரியர்கள் பங்குபற்றுதலுக்கான வாய்ப்பு,
கல்விக் கோட்டங்கள் மற்றும் வலயங்களின் கண்காணிப்பு போன்றவை மிகவும் மோசமான நிலையில்
இருப்பதை இவ்வாய்வு மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பெரும்பான்மையான ஆசிரியர்களின்
கருத்துப்படி இந்நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான பாடசாலை மட்டத்திலான
செயற்பாடுகள் வீழ்ச்சியான நிலையில் இருப்பதையே காட்டி நிற்கின்றது.2016-12-20T00:00:00ZImportance of revealing the value of pre - Islamic period's Arabic proverbs through translating into Tamil language
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2489
Title: Importance of revealing the value of pre - Islamic period's Arabic proverbs through translating into Tamil language
Authors: Safiullah, M.I.M.; Razeek, A.M.2016-12-20T00:00:00Z