<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection: 2021</title>
    <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5833</link>
    <description>2021</description>
    <pubDate>Mon, 27 Apr 2026 14:21:41 GMT</pubDate>
    <dc:date>2026-04-27T14:21:41Z</dc:date>
    <item>
      <title>இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மீது COVID -19  முன்னரும் பின்னருமான சுற்றுலாத்துறையின் தாக்கம்: Granger  காரண காரிய தொடர்பு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5850</link>
      <description>Title: இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மீது COVID -19  முன்னரும் பின்னருமான சுற்றுலாத்துறையின் தாக்கம்: Granger  காரண காரிய தொடர்பு
Authors: Joseph Jerusha, Ranjan; Jeyapiratheeba, A.
Abstract: COVID-19 இன் காரணமாக உலகின் அனைத்து பொருளாதாரங்களும் பாரிய சவாலை &#xD;
எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் COVID-19 தாக்கத்தின் விளைவாக உலகலாவிய &#xD;
ரீதியில் சுற்றுலாத்துறையானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. &#xD;
அவ்வகையில் இவ்வாய்வானது COVID-19 தாக்கத்திற்கு முன்னரும் பின்னருமான இலங்கை &#xD;
பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாதுறை ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி ஆய்வு செய்வதாக &#xD;
அமைந்துள்ளது. இங்கு ஆய்வானது விபரண ஆய்வாக வரைபடங்கள் மற்றும் எதிர்வு &#xD;
கூறல்கள் என்பவற்றினூடாக விளக்கப்பட்டுள்ளதோடு இங்கு 1995-2019 ஆம் ஆண்டு &#xD;
காலப்பகுதிக்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் சுற்றுலாத்துறை வருமானத்திற்கும் &#xD;
இடையிலான தொடர்பினை உறுதி செய்வதற்கு Granger சோடிவாரியான காரண காரியச் &#xD;
சோதனை மெற்கொள்ளப்பட்டுள்ளன, அவ்வகையில் இங்கு சார்ந்த மாறியாக பொருளாதார &#xD;
வளர்ச்சியும் சாராமாறியாக சுற்றுலாத்துறை வருமானம் என்பவற்றை அடிப்படையாகக் &#xD;
கொண்டு Minitab போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு &#xD;
முடிவுகள் பெறப்பட்டுள்ளன. முடிவுகளின் அடிப்படையில் சுற்றுலாத்துறை வருமானமானது &#xD;
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீது ஒரு வழி காரணகாரிய தொடர்பை கொண்டுள ;ளது&#xD;
என கண்டிறியப்பட்டுள்ளதுடன் ஊழுஏஐனு-19 நோய் பரவலானது சுற்றுலாத்துறை &#xD;
வருமானத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன், சுற்றுலாத்துறை வருமானத்தின் வீழ்ச்சியானது &#xD;
பொருளாதார வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.</description>
      <pubDate>Mon, 01 Nov 2021 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5850</guid>
      <dc:date>2021-11-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>சீனாவின் சுற்றுலாத்துறை கேள்வியின் மீது காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம்  மற்றும் எண்ணெய் விலை ஆகியவற்றின் பங்கு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5849</link>
      <description>Title: சீனாவின் சுற்றுலாத்துறை கேள்வியின் மீது காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம்  மற்றும் எண்ணெய் விலை ஆகியவற்றின் பங்கு
Authors: Vasantha, V.; Maheswaranathan, S.
Abstract: சீனாவின் பொருளாதாரத்தில் சுற ;றுலாத்துறை முக்கியமான இலாபத்தை ஈட்டித் தரும் ஒரு &#xD;
துறையாகக் காணப்படுகின்றது. எனவே இவ்வாய்வானது சீனாவின் சுற்றுலாதுறை கேள்வி &#xD;
மீது காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை ஆகியவற்றின் &#xD;
தாக்கத்தினை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு காணப்படுவதோடு&#xD;
மாறிகளுக்கிடையிலான காரண காரியத் தொடர்பினைக் கண்டறிவதாகவும் காணப்படுகின்றது. &#xD;
உலக வங்கி வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்ட 1995-2022 ஆம் ஆண்டு வரையான &#xD;
காலப்பகுதியினைக் கொண்ட 28 ஆண்டுத் தரவுகள் இவ்வாய்வுக்காகப்&#xD;
பயன்படுத்துப்பட்டுள்ளதோடு, சார்ந்த மாறியாக சுற்றுலாத்துறைமீதான வருமானமும், சாரா&#xD;
மாறிகளாக திரவ எரிபொருள் நுகர்வில் இருந்தான காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் &#xD;
ழுPநுஊ எண்ணெய் விலை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறிகளுக்கான சில &#xD;
ஆண்டுத் தரவுகள் Minitab 17 மென்பொருளின் உதவியோடு பெறப்பட்டுள்ள அதேவேளை &#xD;
பகுப்பாய்வுகளுக்காக  Excel, E-Views 10 மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. &#xD;
கூட்டொருங்கிணைந்த பிற்செலவுப் பகுப்பாய்வு மற்றும் காரணகாரியச் சோதனை &#xD;
பகுப்பாய்வு முடிவுகளின் படி, காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை &#xD;
ஆகியவை நீண்ட காலத்தில் புள்ளிவிபர ரீதியாக சுற்றுலாத்துறைக் கேள்வியின் மீது 1 &#xD;
வீத பொருண்மை மட்டத்தில் புள்ளிவிபர ரீதியாகப் பொருளுள்ள வகையில் நேர்க்கணியத் &#xD;
தாக்கத்தினைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை 10 வீத பொருண்மை &#xD;
மட்டத்தில் சுற்றுலாத்துறை வருமானத்திலிருந்து எண்ணெய் விலைக்கு ஒரு வழி காரண &#xD;
காரியத் தொடர்பானது காணப்படுகின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே காபன்&#xD;
ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை என்பன தொடர்பாக சரியான &#xD;
கொள்கைத் தீர்மானங்களின் ஊடாக சீனாவின் சுற்றுலாத்துறை விருத்தியை மேம்படுத்த &#xD;
கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், எதிர்கால ஆய்வுக்காக சில &#xD;
விடயங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.</description>
      <pubDate>Mon, 01 Nov 2021 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5849</guid>
      <dc:date>2021-11-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பழமொழிகளில் அறபு மொழிச்  செல்வாக்கு: “இலங்கை கிராமத்து முஸ்லிம்களின்   பழமொழிகள்” நூலை துணையாகக் கொண்ட ஆய்வு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5848</link>
      <description>Title: கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பழமொழிகளில் அறபு மொழிச்  செல்வாக்கு: “இலங்கை கிராமத்து முஸ்லிம்களின்   பழமொழிகள்” நூலை துணையாகக் கொண்ட ஆய்வு
Authors: தாலிப், எம்.
Abstract: இலங்கை முஸ்லிம் சமூகம் தனித்துவமான பழமொழி இலக்கியத்தை &#xD;
கொண்டிருக்கின்றனர். ஏனைய முஸ்லிம் இலக்கிய வடிவங்களைப் போலவே&#xD;
முஸ்லிம்களின் பழமொழிகளும் அறபு மொழி செல்வாக்குப் பெற்றுள்ளன,&#xD;
இவ்விடயம் இன்றைய இலங்கைச் சூழலில் முக்கிமானதொரு பேசுபொருளாக&#xD;
மாறியுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் சமூக வெளியில் அறபு மொழி&#xD;
தொடர்பிலும், முஸ்லிம்களின் சமய, கல்வி, கலை கலாசார அம்சங்களில் அதன்&#xD;
பின்புலம் தென்படுகின்றமையும் ஏனைய சமூகத்தாரிடையே பல்வேறு வாதப் &#xD;
பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாய்வு, இலங்கை முஸ்லிம்களின் மொழி &#xD;
வழக்கில் அறபு மொழி செல்வாக்குச் செலுத்த ஏதுவாகிய காரணிகளை கண்டறிந்து,&#xD;
முஸ்லிம்களின் பழமொழிகளில் காணப்படும் அறபு மொழிச் சொற்களை &#xD;
வெளிப்படுத்தி, அதன் கருத்துக்களை இஸ்லாமிய, அறபு இலக்கிய &#xD;
மூலாதாரங்களுடன் ஒப்பிட்டு நோக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக &#xD;
விவரண மற்றும் பகுப்பாய்வியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வுக்காக&#xD;
கவிஞர் எஸ். முத்துமீரானின் “இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்”&#xD;
எனும் நூலிலிருந்து, ஆய்வாளரினால் அட்டவணைப் படுத்தப்பட்ட முப்பது &#xD;
பழமொழிகளில், எளிய எழுமாற்று மாதிரியெடுப்பு முறையைப் பயன்படுத்தி 05 &#xD;
பழமொழிகளை ஆய்வுக்காக எடுத்து, அறபு இலக்கிய மூலாதாரங்களில் குறித்த &#xD;
சொற ;கள் பயன்படுத்தியுள்ள பாங்கினை ஆய்வாளர் ஒப்பிட்டு விளக்குகின்றார். &#xD;
இவற்றை, தமிழில் பாவனையில் உள்ள அறபுச் சொற்கள், தமிழுக்கு &#xD;
மொழிபெயர்க்க முடியாத சொற்கள், தமிழுக்கு மொழிபெயர்க்கத்தக்க சொற்கள், &#xD;
மறைமுகக் கருத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என வகைப்படுத்தலாம். அத்துடன், &#xD;
சில பழமொழிகளில் இரு அறபுச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.</description>
      <pubDate>Mon, 01 Nov 2021 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5848</guid>
      <dc:date>2021-11-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>ஹதீஸ் இலக்கியத்தை கவிதை வடிவில் மொழிபெயர்ப்புச்  செய்தலின் சாத்தியத்தன்மை கவிஞர் எம். எச். எம். புஹாரி  பலாஹியின் “புஹாரியின் பொன்மலர்கள்” நூலை துணையாகக்  கொண்ட ஆய்வு</title>
      <link>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5847</link>
      <description>Title: ஹதீஸ் இலக்கியத்தை கவிதை வடிவில் மொழிபெயர்ப்புச்  செய்தலின் சாத்தியத்தன்மை கவிஞர் எம். எச். எம். புஹாரி  பலாஹியின் “புஹாரியின் பொன்மலர்கள்” நூலை துணையாகக்  கொண்ட ஆய்வு
Authors: மீரா முகைதீன், எச். எல்.
Abstract: இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியையும் இஸ்லாமிய இலக்கியங்களையும் &#xD;
வளர்த்தெடுப்பதில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். முஸ்லிம்கள் அறபு &#xD;
மொழியில் அமைந்துள்ள தமது சமய இலக்கியங்களை தாய்மொழியான தமிழுக்கு &#xD;
மொழிபெயர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினர். அந்த வகையில், காத்தாங்குடியைச் &#xD;
சேர்ந்த கவிஞரும் இஸ்லாமிய அறிஞருமான மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி &#xD;
அவர்கள் ‘புஹாரீயின் பொன்மலர்கள்’ எனும் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதி முக்கிய &#xD;
ஒன்றாகும். ஹதீஸ்களை கவிதை நடையில் மொழிபெயர்க்கும் போது மொழியியல்,&#xD;
கவித்துவம் மற்றும் சமயம் சார்ந்த பிரச்சினைகள் எழுகின்றன. எனவே இவ்வாய்வு, ஹதீஸ் &#xD;
இலக்கியத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளும் &#xD;
பிரச்சினைகளை கண்டறிந்து, அதனைத் தீர்ப்பதையும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான &#xD;
மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹியின் இலக்கியச் செயற்பாடுகளை அறிமுகம் செய்து &#xD;
அவரது “புஹாரீயின் பொன்மலர்கள்” மூலம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற &#xD;
முனைதலையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக விவரண மற்றும் பகுப்பாய்வியல் &#xD;
முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஸஹீஹுல் புஹாரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 &#xD;
ஹதீஸ்களை கவிதை வடிவில் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள கவிஞர் தம் மொழிபெயர்ப்புச் &#xD;
செயற்பாட்டில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல், தழுவல், சுருக்கம் போன்ற &#xD;
மொழிபெயர்ப்பு உத்திகளைக் கையாண்டுள்ளார். அதேவேளை, அவர் தனது &#xD;
மொழிபெயர்ப்பு பணியில் நேர்த்தியாகவும், ஹதீஸ்களின் கருத்துக்கள் கெடாமலும், &#xD;
கவித்துவத்தன்மை குன்றாமலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளமை இவ்வாய்வுக் கூடாக &#xD;
கண்டறியப்பட்டுள்ளது.</description>
      <pubDate>Mon, 01 Nov 2021 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5847</guid>
      <dc:date>2021-11-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

