Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4961
Title: ஆங்கிலேயா் ஆட்சியில் இந்திய சிறுகைத்தொழில்களின் நிலை
Authors: முஸ்தபா, ஏ. எம். எம்.
அல்பொன்சோ, எஸ்.
Keywords: ஆங்கிலேயர் ஆட்சி
சிறுகைத்தொழில்
இந்தியா
Issue Date: 2019
Publisher: Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka
Citation: Kalam, Research Journal of Faculty of Arts and Culture. Volume XII (I). pp 19-27. Issue-I, 2019
Abstract: இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலமாகிய கி.பி. 1600 முதல் 1947 வரையிலான காலம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். அக்கால சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கூறுகளை ஆராயும்போது இதனை தௌிவாக காண முடியும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிய முழுமையான அறிவு வேண்டுமெனில் அதன் சமூக மற்றும் அரசியலை தௌ்ளத்தௌிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்தியாவின் நீண்ட வரலாற்று பண்பாட்டினை உலகெங்கும் கொண்டு செல்வதற்கு வரலாற்றில் வர்த்தகமும் வெளிநாட்டு வணிகரும் முக்கிய காரணிகளாக திகழ்ந்தன. இந்திய கைத்தறி நெசவு, விவசாயம் மற்றும் பிற கைத் தொழில்களும் இலாபமீட்டும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் ஐரோப்பியர்களின் வருகையால் நாட்டில் வர்த்தகப் போட்டிகளும், ஆதிக்கப் போட்டிகளும் அதிகரிக்கத் தொடங்கின. கி.பி. 1600ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி காலூன்றிய பிறகு இக்குழப்பங்கள் மேலும் அதிகாித்தன. கிழக்கிந்திய கம்பெனியின் பொருளாதார கொள்கையாலும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் இந்திய கைத்தொழில்கள் எவ்வாறு பாதிப்படைந்தது என்பது பற்றியும் அதனால் சமூக மற்றும் அரசியல் தளங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது. மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு இந்தியாவை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பது குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4961
Appears in Collections:Volume 12 Issue 1

Files in This Item:
File Description SizeFormat 
Article - 02.pdf123.86 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.