<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>7th International Symposium - 2017</title>
<link href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2942" rel="alternate"/>
<subtitle>This is the proceedings of 7th International Conference held on 07 - 08 December, 2017 at South Eastern University of Sri Lanka</subtitle>
<id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2942</id>
<updated>2026-05-07T19:28:45Z</updated>
<dc:date>2026-05-07T19:28:45Z</dc:date>
<entry>
<title>Muslim women involvement in the social works in Ulahitiwala and impact of Islamic organizations on them</title>
<link href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5208" rel="alternate"/>
<author>
<name>Jazeel, M.I.M.</name>
</author>
<author>
<name>Askiya, M.A.R.</name>
</author>
<author>
<name>Nuskiya, S.M.F</name>
</author>
<id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5208</id>
<updated>2022-02-07T10:22:20Z</updated>
<published>2017-01-01T00:00:00Z</published>
<summary type="text">Muslim women involvement in the social works in Ulahitiwala and impact of Islamic organizations on them
Jazeel, M.I.M.; Askiya, M.A.R.; Nuskiya, S.M.F
சமூகப் பணியும் அதில் முஸ்லிமின் ஈடுபாடும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று இப்பணியில் முஸ்லிம் பெண்களின் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. இந்த வகையில் இக்கற்கை மள்வானை உளஹிடுவல பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களின் சமூக சேவை ஈடுபாட்டை கண்டறிதலையும் இந்த ஈடுபாட்டுக்கான அவர்கள் மீதான இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கினை பரிசிலித்தலையும் பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளது. பண்பு ரீதியான இக்கற்கை, உளஹிடுவல பிரதேசத்தில் குறிக்கோள் மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சமூக சேவைப் பணிகளில் ஈடுபடும் 45 முஸ்லிம் பெண்களிடமிருந்து நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையிலானது. இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். சாதாரன கல்வித் தகைமையையுடைய குடும்பப் பெண்களான இவர்கள் இப்பிரதேசத்தில் கல்வி, சமயம், பொருளாதாரம் ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்கு பங்காற்றுகின்றனர். இஸ்லாத்தின் போதனைகளே அவர்களின் சமூக சேவை ஆர்வத்திற்கான பிரதான தூண்டல்களாகும். இஸ்லாமிய இயக்கங்கள் இப்பெண்களின் ஈடுபாட்டிற்கான ஆதரவு, அனுசரனை என்பவற்றை வழங்குகின்றன. மேலும் இப்பெண்களில் அநேகர் ஒன்றில் இஸ்லாமிய இயக்கங்களின் தீவிர ஆதரவாளர்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களாக காணப்படுகினறனர்.
</summary>
<dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>Da’wah of female students and challenges face them: A case study of South Eastern University of Sri Lanka</title>
<link href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5207" rel="alternate"/>
<author>
<name>Jazeel, M.I.M.</name>
</author>
<author>
<name>Nasmiya, A.H.</name>
</author>
<author>
<name>Dheeshan, Y.F.</name>
</author>
<author>
<name>Rukaiya, M.J.F.</name>
</author>
<id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5207</id>
<updated>2022-02-07T10:20:00Z</updated>
<published>2017-01-01T00:00:00Z</published>
<summary type="text">Da’wah of female students and challenges face them: A case study of South Eastern University of Sri Lanka
Jazeel, M.I.M.; Nasmiya, A.H.; Dheeshan, Y.F.; Rukaiya, M.J.F.
தஃவா எனும் எண்ணக்கரு இஸ்லாத்தில் முக்கியமானதாகும். முஸ்லிம் தனது நிலை, நிலமைகளுக்கு ஏற்ப தஃவாவை முன்னெடுக்க வேண்டியவனாவான். இந்த வகையில் தென்  கிழக்கு  பல்கலைக்கழக  மாணவியர்களின்  தஃவாப்  பணியின்  ஈடுபாடு  அதனை மேற்கொள்ள  அவர்கள்  கையாளும்  வழிமுறைகளை  கண்டறிவதையும்  அப்பணியில் அவர்கள்  எதிர்கொள்ளும்  சவால்களை  இனங்காண்பதனையும்  இவ்வாய்வு  பிரதான குறிக்கோளாக  கொண்டுள்ளது.  அளவு  ரீதியிலான  இவ்வாய்வு  தென்  கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாம் வருட  விடுதி  மாணவியர்கள்  மத்தியில்  எழுமாறக  தெரிவு  செய்யப்பட்ட  79  பேரிடம் வினாக்கொத்தின்  மூலம்  பெறப்பட்ட  தரவுகளில்  பகுப்பாய்வு  அடிப்படையிலானது. மாணவியர்கள்  பொதுவாக  தஃவாவில்  சாதாரணமான  ஆர்வத்தையும்  ஈடுபாட்டையும் கொண்டுள்ளனர்.  பாரம்பரிய  ரீதியிலான  தஃவா  அணுகுமுறைகளிலேயே  பெரிதும் தங்கியுள்ள  அவர்கள்  குழு,  கூட்டுச்  செயற்பாடுகளை  விட  தனிப்பட்ட  ரீதியிலேயே தஃவாப்  பணியில்  ஈடுபடுகின்றனர்.  உயர்  கல்விச்  சூழல்  அமைவு  ஒன்றில்  பட்டதாரி மாணவர்கள்  என்ற  வகையில்  அறிவார்ந்த,  ஆர்க்கபூர்வமான,  திறன்கள்  சார்பான தஃவா  முறைகளை  அவர்கள்  பின்பற்றுவது  ஓப்பீட்டு  ரீதியில்  குறைவானது  என்பன இவ்வாய்வின்  பிரதான  கண்டறிதல்களாகும்.  உயர்;கலா  நிலயமொன்றில்  தஃவாக்கான திட்டமிடலை  மேற்கொள்வோருக்கு  இவ்வாய்வு  அடிப்படை  கருத்தாக்கங்களை வழங்கவல்லது.
</summary>
<dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>மருமக்கள் தாயம்: மரபும் தொடர்ச்சியும் (கிழக்கிலங்கை தமிழ்ச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட முன்வரைபு)</title>
<link href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3118" rel="alternate"/>
<author>
<name>Paskaran, Suman</name>
</author>
<id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3118</id>
<updated>2021-10-18T19:26:36Z</updated>
<published>2017-12-07T00:00:00Z</published>
<summary type="text">மருமக்கள் தாயம்: மரபும் தொடர்ச்சியும் (கிழக்கிலங்கை தமிழ்ச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட முன்வரைபு)
Paskaran, Suman
உலகில் தோன்றிய அனைத்துச் சமூகங்களிலும் தாய்வழிச் சமூக அமைப்பே நிலவியுள்ளது.&#13;
மனித நாகரிகம் மேம்படத் தொடங்கியபோது, பெண் தனது தனித்துவத்தை இழக்க நேரிட்டது. தாய் வழிச்&#13;
சமூக அமைப்பு தந்தைவழிச் சமூக அமைப்பாக மாற்றங் கண்டது. ஆயினும், பண்டைய மரபின் எச்சங்கள்&#13;
சமூக அமைப்பின் சில கூறுகளில் இன்றும் தங்கிக் காணப்படுகின்றன. தந்தைவழி ஆதிக்கம் சமூகத்தை&#13;
ஆக்கிரமித்துள்ள சூழலில், இலக்கிய ஆய்வுகள் சில தாய்வழிச் சமூக அமைப்பின் எச்சங்களை மையப்படுத்தி&#13;
பண்டைய பண்பாட்டை † தாய்வழிச் சமூக அமைப்பை எடுத்தியம்புவனவாக வெளிவந்துள்ளன. இந்நிலையில்,&#13;
கள ஆய்வுத்தகவல்களை மையம்கொண்டு தாய்வழிச் சமூக அமைப்பின் ஒரு கூறாக அமையும் மருமக்கள்&#13;
தாயம் குறித்த ஒரு முன்வரைபு இங்கு மேற்கொள்ளப்படுகிறது. உரித்துக்கள் மருமக்கள் வழி கைமாறப்படும்&#13;
தாய்வழி எச்சத்தின் ஒரு கூறு இங்கு சமூகவியல் ஆய்வின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது. மருமக்கள்&#13;
தாயம் குறித்த தெளிவும் அது கிழக்கிலங்கைத் தமிழரிடத்தில் நிலைகொண்டுள்ளவாறும் ஆலயம் என்ற சமூக&#13;
நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டே ஆராயப்படவுள்ளது.&#13;
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் கேரளத்தில் உரித்துக்கள் மருமக்கள் வழி கைமாறப்படும்&#13;
மருமக்கள் தாயம் எனும் மரபு காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அரசின் தலையீட்டால் அம்மரபு&#13;
தடைசெய்யப்பட்டது. ஆயின், கிழக்கிலங்கைக்கும் கேரளத்திற்கும் இடையே நிலவிய தொடர்பின் வழி&#13;
கிழக்கிலங்கையில் கால்கொண்ட மருமக்கள் தாயம் இன்று வழக்கொழிந்து போகாது காணப்படுகிறது.&#13;
அத்தகைய பேணுகை ஆலயம் என்ற நிறுவனத்தை மையமிட்டே பெரும்பாலும் காணப்படுகிறது. அண்மைக்&#13;
காலமாக அத்தகைய பேணுகையில் நெகிழ்ச்சிப் போக்குகள் சில இடம்பெறுவதனையும் அவதானிக்க&#13;
முடிகிறது. மேற்படி ஆய்வு கள ஆய்வையே முழுவதுமாக மையம்கொள்கிறது. கள ஆய்வுத்தகவல்கள்&#13;
யாவும் சமூதாயவியல், வரலாற்றியல் அணுகுமுறைக்குட்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.
</summary>
<dc:date>2017-12-07T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>தற்காலத்தில் பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் சமூக ஊடகங்களின் பாவனையும், அவற்றின் விளைவுகளும்: கல்லடி பிரதேத்தை மையமாகக் கொண்ட சமூகவியல் ஆய்வு</title>
<link href="http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3117" rel="alternate"/>
<author>
<name>டயசியா, பு.</name>
</author>
<id>http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3117</id>
<updated>2021-10-18T19:25:29Z</updated>
<published>2017-12-07T00:00:00Z</published>
<summary type="text">தற்காலத்தில் பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் சமூக ஊடகங்களின் பாவனையும், அவற்றின் விளைவுகளும்: கல்லடி பிரதேத்தை மையமாகக் கொண்ட சமூகவியல் ஆய்வு
டயசியா, பு.
தற்காலச் சமூகங்களின் சமூகக் கட்டமைப்பானது ““E-society” என&#13;
அழைக்கப்படுமளவு இணையத்துடனும், சமூக ஊடகங்களுடனும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது.&#13;
ஏனெனில் இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் மக்கள் வாழ்க்கை நடைமுறைகள் அனைத்தும் சமூக&#13;
ஊடகங்களை சார்ந்ததாகவே அமைந்துள்ளன. சமூக ஊடகங்கள் என்பது மக்கள் இயங்கலை (Online)&#13;
மூலம் ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்வதற்கு பயன்படுத்தும் ஊடகங்களாகும். எனினும் இன்று&#13;
சமூக ஊடகங்களின் பாவனையானது வளா்ந்தவர்களால் மட்டுமன்றி சிறுவர்கள் என மதிக்கப்படும் 18&#13;
வயதிற்கு குறைந்த பாடசாலை மாணவர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவது&#13;
வருத்தத்திற்குரிய விடயமாகும். அந்தவகையில் ஆய்வுப் பிரதேசத்திலும் சமூக ஊடகங்கள் பாடசாலை&#13;
மாணவர்களாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை மையமாகக் கொண்ட வகையில் “தற்காலத்தில்&#13;
பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் சமூக ஊடகங்களின் பாவனையும், அவற்றின் விளைவுகளும்”&#13;
எனும் தலைப்பின் கீழாக கல்லடி பிரதேசத்தை மையமாகக் கொண்டதாகவே இந்த ஆய்வானது&#13;
மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வில் வரையறைக்குட்பட்ட வகையில் தரம் 10, 11, 12 மாணவர்களின்&#13;
சமூக ஊடகங்களின் பாவனையே கருத்திற் கொள்ளப்படுகின்றது. சமூக ஊடகங்களை மாணவர்கள்&#13;
எதற்காக பயன்படுத்துகின்றனர், பயன்படுத்துவதன் முழுமையான நோக்கம் என்ன, சமூக ஊடகங்களை&#13;
பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் மற்றும் சமூக ஊடகங்களை பாவிக்கும் மாணவர்களின்&#13;
கல்வி நிலை, பெற்றோர்கள், பிரதேசவாசிகள், ஆசிரியர்கள் போன்றோரின் கருத்துக்கள் இவ்வாய்வில்&#13;
கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில் வினாக்கொத்து முறை, பேட்டிமுறை, கலந்துரையாடல்&#13;
மூலம் முதலாம் நிலைத்தரவுகளும், கிராம சேவகர் அறிக்கை, பாடசாலை அறிக்கைகள்,&#13;
புள்ளிவிபரங்கள் மூலம் இரண்டாம் நிலைத்தரவுகளும் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&#13;
ஆய்விற்காக அமெரிக்க உளவியலாளர் மாஸ்லோவின் “தேவைக்கோட்பாடு” பயன்படுத்தப்பட்டுள்ளது.&#13;
அத்தோடு ஆய்வினோடு தொடர்புடைய மாறிகளான பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும்&#13;
தரவுகள் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று சமூக ஊடகங்களாது 51%&#13;
மாணவர்களால் பயன்படுத்தப்படுவது ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. சமூக ஊடகங்களான&#13;
முகப்புத்தகம், வட்ஸ் அப், இன்ஸ்டகிராம், யுடியுப், ஸ்கைப், வைபா் ஆகியன பரவலாக மாணவர்களால்&#13;
பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்கள்&#13;
மத்தியில் கல்வியில் மந்தகதி, ஞாபக மறதி, தனிமைப்படுத்தப்படுதல், சமூக ஊடகங்களால் அதிகமாக&#13;
உள்ளீர்க்கப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்தது.
</summary>
<dc:date>2017-12-07T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
