SEUIR Repository

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊழலின் தாக்கம்: ஒரு பொருளியல் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Vasantha, V.
dc.contributor.author Jeyapiratheeba, A. A.
dc.date.accessioned 2021-05-21T16:50:30Z
dc.date.available 2021-05-21T16:50:30Z
dc.date.issued 2021-01-19
dc.identifier.citation 9th South Eastern University International Arts Research Symposium -2020 on "Global Dimension of Social Sciences and Humanities through Research and Innovation". 19th January 2021. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. p.34. en_US
dc.identifier.isbn 9789556272536
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5576
dc.description.abstract ஊழலானது பொருளாதாரத்திற்குத் தடையாக அமையும் ஒரு காரணியாகும். எனவேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதனது தாக்கம் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் இவ் ஆய்வின் பிரதான நோக்கமாக நிலையான விலைகளினாலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊழலின் தாக்கத்தினை கண்டறிதல் என்பது காணப்படுவதோடு, துணை நோக்கங்களாவன, நிலையான விலைகளினாலான மொத்த உள்நாட்டு உற்பத்தியினை தீர்மானிக்கும் ஏனைய பேரினப் பொருளாதார காரணிகள் மற்றும் அவற்றுக்கிடையிலான நீண்டகால மற்றும் காரண காரியத் தொடர்பு ஆகியவற்றைக் கண்டறிதலாகும். மத்திய வங்கி, உலக வங்கி, Transparency International ஆகிய வலைத்தளங்களில் இருந்து 2002 – 2018 வரையான வருடாந்த தரவுகள் பெறப்பட்டு அவை ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வில் நிலையான விலைகளின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி; சார்ந்த மாறியாகவும், ஊழல் தரச் சுட்டெண், சனத்தொகைப் பருமன் மற்றும் மொத்த மூலதன உருவாக்கம் ஆகியவற்றை சாரா மாறியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்ட மாறிகளுக்கான நிலைத்த தன்மைச் சோதனையின் Augmented Dicky Fuller முடிவுகளின் படி அனைத்து மாறிகளும் மடக்கை முதலாம் வித்தியாசத்தில் நிலைத்த தன்மைச் செயன்முறையினைப் பின்பற்றுவனவாகக் காணப்படுகின்றன. பன்மடங்கு பிற்செலவுப் பகுப்பாய்வு மூலம் நீண்டகால கூட்டொருங்கிணைவுத் தொடர்பானது ஆராயப்பட்டுள்ளது. கிரேஞ்சர் காரண காரியச் சோதனையின் அடிப்படையில் மாறிகளுக்கு இடையிலான காரண காரியத் தொடர்பானது ஆராயப்பட்டுள்ளது. பகுப்பாய்வு மென்பொருட்களாக Excel, E-Views 10 ஆகிய மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளின் படி நீண்ட காலத்தில் 10 வீத பொருண்மை மட்டத்தில் ஊழல் தரச் சுட்டெண்ணும், 1 வீத பொருண்மை மட்டத்தில் சனத்தொகைப் பருமன் மற்றும் மொத்த மூலதன உருவாக்கம் ஆகியவை நேர்க்கணிய ரீதியில் புள்ளிவிபர ரீதியாக பொருளுள்ள வகையில் தாக்கம் செலுத்துகின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது. காரண காரியச் சோதனைப் பெறுபேறுகளின் முடிவுகளின் படி, நிலையான விலைகளில் இருந்தான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 1 , 5 வீத பொருண்மை மட்டத்தில் முறையே ஊழல் தரச் சுட்டெண், சனத்தொகைப் பருமன் ஆகியவற்றுக்கு ஒரு வழிக் காரண காரியத் தொடர்பானது காணப்படுகின்றது என அறியப்பட்டுள்ளது. எனவே ஊழல், சனத்தொகைப் பருமன் மற்றும் மொத்த மூலதன உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ள கொள்கை வகுப்பாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும் எனவும், எதிர்கால ஆய்வுக்காக சில விடயங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka. en_US
dc.subject மொத்த உள்நாட்டு உற்பத்தி en_US
dc.subject ஊழல் en_US
dc.subject சனத்தொகைப் பருமன் en_US
dc.subject மொத்த மூலதன உருவாக்கம் பல்மாறி பிற்செலவுப் பகுப்பாய்வு en_US
dc.title இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊழலின் தாக்கம்: ஒரு பொருளியல் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account