Abstract:
கொரோனா வைரஸ் பாதிப்பால் மிக முக்கியமான துறையான கல்வித்
துறையானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுவரை மீண்டும் பழைய கல்வி
கற்றல் செயற்பாட்டிற்கு மீள முடியாத நிலைமை காணப்படுகிறது. எமது நாட்டில் ஊழுஏஐனு-
19 தொற்றுக் காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிகழ்நிலை மூலமான கற்பித்தல்
செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிகழ்நிலைக் கற்கைமுறை மூலமான கற்றல்
கற்பித்தல் நடவடிக்கைகளினால் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீட முதலாம்
வருட மாணவர்கள் எதிர்நோக்கிய சவால்களை அடையாளப்படுத்துவது இவ்வாய்வின்
நோக்கமாகும். பண்புசார் விபரிப்பு ஆய்வு முறையியலில் அமைந்த இவ்வாய்வானது முதலாம்
நிலைத் தரவுகளுக்காக வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் ஆகிய முறைகளைப்
பயன்படுத்துகின்றது. வினாக்கொத்தானது எளிய எழுமாற்று அடிப்படையில் இஸ்லாமியக்
கற்கைகள் அறபு மொழிப் பீட முதலாம் வருட மாணவர்கள் தொன்னூறு பேருக்கு
வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், பத்து பேரிடம் நேர்காணல்
மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் நிலைத் தரவுகள் நூல்கள், இணையத்தளங்கள்,
சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. நிகழ்நிலைக் கற்றல் மாணவர்கள்
கல்வியை இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு
வழிவகுத்துள்ளது. இருப்பினும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்கள் பெரும்
சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். மேலும், வகுப்பறைக் கற்றலுக்கு பழக்கப்பட்ட
மாணவர்கள் நிகழ்நிலைக் கற்றலினாலும் அறிமுகமில்லாத மென்பொருட்கள்
பாவனையினாலும் கற்றலில் தெளிவின்மையாலும் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.
மேலும், சுகாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்பன
இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும்.