Abstract:
சட்டத்துறையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் இன்று பரவலாகப் பேசப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கருத்து முரண்பாடான விடயங்களான பெண்களின் திருமண வயதெல்லை, காழி நீதிமன்றங்கள், பெண்கள் காழியாக நியமித்தல், வலி, விவாகப் பதிவு மற்றும் மணமகள் சம்மதம் போன்றவை காணப்படுகின்றது. இது தொடர்பாக சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும் வேண்டி நிற்கின்றது. அந்தவகையில் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி பொதுவான ஆய்வுகள் பல இடம்பெற்றிருந்தாலும் இலங்கையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் இடம்பெறவில்லை. முஸ்லிம்களை சிறுபான்மையாகக் கொண்ட இலங்கை நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன என்பதை ஆய்வாளரால் கண்டறியப்பட்டது. இதன் பின்னணியில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் இரண்டிலுமுள்ள கருத்து முரண்பாடுகளை எடுத்து விளக்கி ஆராய்ந்துள்ளது. இவ்வாய்வுடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுகள், ஆவணங்கள். நூல்கள், இணையத்தள தகவல்கள் போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் தனது கோட்பாட்டுத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்திலுள்ள கருத்து முரண்பாடுகளை இணங்கண்டு இலங்கையில் அவற்றின் நடைமுறைச் சிக்கல்களை அடையாளம் கண்டு அதற்கான தீர்வையும் அடையாளம் காண்பதில் இவ்வாய்வு கணிசமான பங்களிப்பை வழங்கும்.