SEUIR Repository

கோறளைப்பற்று வடக்குப் பிரதேசத்திற்கு உட்பட்ட ஆரம்பப் பிள்ளைப் பருவச் சிறார்களுக்குக் கற்றல் வாய்ப்பை வழங்குவதில் முன்பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்கள்: ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author நிதிஹரன், க.
dc.date.accessioned 2018-09-28T03:29:50Z
dc.date.available 2018-09-28T03:29:50Z
dc.date.issued 2018-06-26
dc.identifier.citation 6th South Eastern University Arts Research Session 2017 on "New Horizons towards Human Development ". 26th June 2018. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. pp.396-405. en_US
dc.identifier.issn 2651 - 0219
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3211
dc.description.abstract கோறளைப்பற்று வடக்குப் பிரதேசத்தில் முன்பள்ளிகளின் செயற்பாடுகள் எத்தகைய சவால்களை எதிர்நோக்கின்றன என்பதையும் முன்பள்ளிகளின் தற்போதைய நிலையையும் அறிவதாகவே இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆய்வுப் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசம் அமைந்துள்ளது. தரவுகள் சேகரிப்பதற்கான மாதிரி எடுத்தலாக 20 முன்பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டன. இம்முன்பள்ளிகளின் ஒவ்வொரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து மூலம் தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் இப்பிரதேச முன்பள்ளி கல்வி உத்தியோகத்தருடனான நேர்முகம்காணல் மூலமும் தரவுகள் பெறப்பட்டு இவ்வாய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவு சேகரிப்பு முறையாக ஆசிரியர்களுக்கான வினாக்கொத்தும் முன்பள்ளி உத்தியோகத்தருடான நேர்முகம் காணலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவுப் பகுப்பாய்வு நுட்ப முறைகளாக பண்புசார் அணுகுமுறை, அளவுசார் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்புசார் அணுகுமுறையில் தரவு பகுப்பாய்வு செய்யும் போது சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து பொதுவாகக் கருப்பொருளைக் கண்டறிதலும் இனங்காணப்பட்ட அம்சங்களிடையே தொடர்புகளை உருவாக்குதலும் இடம்பெறும். அளவுசார் அணுகுமுறையிலே சதவீதம் கணித்தல், தரவுகளை அட்டவணைப்படுத்தல், போன்ற விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. தரவுப் பகுப்பாய்வின் போது இவ்விரு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான பகுப்பாய்வு நுட்பங்களாகத் தரவுகளை அட்டவணைப்படுத்தல், நூற்றுவீதம் கணித்தல் என்பன இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவில் முன்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்பது போதுமானதாக அமைந்திருக்கவில்லை என்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் பெற்றோர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றமையும் கற்றலுக்கான வாய்ப்புக்கள் அண்மித்ததாக அமையாமையுமாகும். 56% ஆனோரின் கருத்துப்படி பெற்றோரின் பங்களிப்பு போதுமானதாக அமைந்திருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு காண்பபட்டாலும் நிரந்தரமாக நீடித்து செயற்படத்தக்க வகையில் அமைந்திராமை ஒரு குறைபாடாகும். இது தொடர்பில் 78% ஆனோரின் கருத்துப்படி இவற்றின் பங்களிப்பு போதுமானதாக அமைய வில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் அரசசார்பு நிறுவனங்களின் பங்களிப்பும் திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை என்பது 72% ஆனோரின் கருத்தாகும். முன்பள்ளி உத்தியோகத்தரின் கருத்துக்கள் மூலம் அப்பிரதேசத்தில வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது இப்பிரதேச முன்பள்ளிக் கல்வி தொடர்பிலான மாற்றங்களை இனங்காண முடியும் என்பதையும் இவ்வாய்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka. en_US
dc.subject கல்வி en_US
dc.subject முன்பள்ளி en_US
dc.subject சிறார்கள் en_US
dc.subject கற்றல் en_US
dc.subject அடைவு en_US
dc.title கோறளைப்பற்று வடக்குப் பிரதேசத்திற்கு உட்பட்ட ஆரம்பப் பிள்ளைப் பருவச் சிறார்களுக்குக் கற்றல் வாய்ப்பை வழங்குவதில் முன்பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்கள்: ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • SEUARS - 2017 [63]
    South Eastern University Arts Research Session - 2017

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account