SEUIR Repository

மியன்மார் அரசும் ரொஹிங்ய முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை

Show simple item record

dc.contributor.author அருந்தவராஜா, க.
dc.contributor.author மங்களரூபி, சிவகுமார்
dc.date.accessioned 2019-01-10T07:20:55Z
dc.date.available 2019-01-10T07:20:55Z
dc.date.issued 2018-11-29
dc.identifier.citation 5th International Symposium. 29 November 2018. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 36-47. en_US
dc.identifier.isbn 978-955-627-135-5
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3453
dc.description.abstract பொதுவாகவே அண்மைக்காலங்களில் ஆசியப் பிராந்தியத்தில் அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளில் சிறுபான்மையினமாக வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாதத்தின் பின்னணியில் உருவான அடக்குமுறைகளின் உச்ச வெளிப்பாடுகளிலொன்றுதான் மியன்மாரில் ரொஹிங்ய (Rohingya) முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனச்சுத்தீகரிப்பு நடவடிக்கையாகும். இன்று வரை பயங்கரவாதத்தினை அழிப்பது என்ற போர்வையில் மியன்மாரில் ரொஹிங்ய முஸ்லிம்கள் துன்பப்படுத்தப்படுகின்றனரென்பது சர்வதேசங்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற வெளிப்படையானதொரு உண்மையாகக் காணப்படுகின்றது. அங்கு ரொஹிங்யர்களுக்கு எதிராக 2017 இன் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான இன ஒடுக்கு முறையான நடவடிக்கைகளின் பின்னணியில் அவர்கள் தமது உயிரையும் உடமைகளையும் இழந்து அனாதைகளாகி பங்களாதேஷ் போன்ற அயல் நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். பௌத்தமத நாடான மியன்மாரில் அங்குள்ள குறிக்கப்பட்ட மதப்பிரிவினைச் சேர்ந்த துறவிகள் சிலரும் தேசியவாதிகள் பலரும் ரொஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற கலகங்களில் பிரதான பங்கெடுத்து வருகின்றனர். காலணித்துவ ஆட்சியாளரான ஆங்கிலேயரது காலத்திலிருந்தே இவ்வின முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வுகள் பெரும்பான்மையின பர்மியர்களிடம் இருந்து வருவதனை வரலாற்று ரீதியாக அவதானிக்க முடியும். இக் காலப்பகுதியே அதனது தொடக்க காலகமாகவும் உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே அண்மைக் காலங்களில் மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு எடுத்து வருகின்ற மோசமான நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மேலும் அவர்களுக்கு எதிராக அப்பகுதிகளில் வெடித்துள்ள வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதிலும்கூட பர்மிய அரசு அக்கறைகாட்டாத நிலையே காணப்படுகின்றது. இதனால் சர்வதேச அளவில் அந்நாட்டுக்கு எதிராகப் பல்வேறு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பங்கள் சர்வதேசங்களின் அழுத்தத்தின் பின்னணியில் ஓரளவு குறைந்துள்ளதென்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் முற்றாக முடிந்துவிட்டதென்றும் கூறமுடியாது. தற்போது பர்மிய அரசு புலம் பெயர்ந்த ரொஹிங்ய அகதிகளை மீளவும் அழைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரலாற்று அணுகுமுறையினடிப்படையில் அமைப்பெற்ற இவ்வாய்விற்குத் தேவையான தரவுகள் முதற்தர மற்றும் இரண்டாம்நிலை தரவுகள் என்ற அடிப்படையில் பெறப்பட்டுள்ளன. இவற்றில் நேர்காணல்கள், வினாக்கொத்துக்கள், அவதானிப்புக்கள், நூல்கள், பத்திரிகைகள், கட்டுரைகள் என்பன பிரதான இடத்தினைப் பெற்றுள்ளன. மேலும் ரொஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணி, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அதற்கு எதிராகச் சர்வதேசங்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் போன்றவற்றினை வெளிக்கொணர்வதே ஆய்வினது பிரதான நோக்கங்களாக உள்ளன. எனவே இனவாதமும் மதவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு தேசத்தில் எப்போதும் கைவிடப்பட்டதொரு இனமாகவே சிறுபான்மையினம் இருக்குமென்பது வரலாறு கற்றுத் தருகின்ற பாடங்களிலொன்று. சர்வதேசங்கள் இவர்களது அழிவில் குளிர்காயுமென்பதே உண்மை. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka. en_US
dc.subject இனச்சுத்தீகரிப்பு en_US
dc.subject சர்வதேசங்கள் en_US
dc.subject ரொஹிங்ய முஸ்லிம்கள் en_US
dc.subject நாடற்றவர் en_US
dc.title மியன்மார் அரசும் ரொஹிங்ய முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களும்: ஒரு வரலாற்றுப் பார்வை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account