Abstract:
இஸ்லாம் வழங்கும் பெண் உரிமைகள் குறித்த முஸ்லிம் பெண்களின் கருத்துநிலை, பல்வேறு தாக்கங்களுக்குட்பட்டு பரிணமித்துள்ளது. இந்த வகையில் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் தொடர்பில் உக்குவெலைப் பிரதேச முஸ்லிம் பெண்களின் அனுபவத்தினையும் கருத்து நிலையினையும் பரிசீலித்தல் மற்றும் அவர்களுடைய கருத்து நிலையினை இஸ்லாமிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். அளவு மற்றும் பண்பு ஆகிய முறைமைகளின் அடிப்படையைக் கொண்ட ஆய்வானது நேர்காணல், வினாக்கொத்து, குழுக் கலந்துரையாடல், போன்ற வழிகளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வுக்குட்படுத்தியுள்ளது. தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, கல்வி, தொழில், அரசியல், பொருளாதாரம், சமூக, பொதுவாழ்வு சார்ந்த விடயங்களில் பெண்களுக்கு இஸ்லாம் வரையருத்துள்ளமையை அவர்களின் உரிமைகளை மறுதலிப்பதாக உக்குவெலைப் பிரதேச முஸ்லிம் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் கருதவில்லை. மாறாக இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள வரையறைகள் அனைத்து துறைகளிலும் பெண்களின் வாழ்வினை ஒழுங்கமைத்து செயற்படுத்துவதற்கும் நன்மதிப்பையும் பெறுமானத்தையும் ஏற்படுத்தவல்லது என்றும் இவர்கள் கூறுகின்றனர். இந்த கள அனுபவ ஆய்வு முன்னோடியாகவும் முஸ்லிம்களின் கருத்துநிலை கருதப்படுகின்றது. இத்துறைசார் கற்கைக்கான பற்றிய ஒரு ஆவணமாகவும் கருதப்படுகின்றது.